வை.கோ. திருமாவளவன், சீமான், அமீர், கண்ணப்பன் உள்பட பிரிவினையை தூண்டிவிடும் நோக்கத்தோடு தமிழக மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் 150 - சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டுள்ளனர். மதியம் 2 - மணியளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய போது தூதரக அலுவலக அதிகாரி ஒருவர் மாணவர்களை நோக்கி இழிவாக பேசியதால் தூதரக இரும்பு வாயிலை உடைத்து மாணவர்கள் உட்புகுந்து கற்களால் தாக்கியதால் அலுவலகத்திற்கு பெரும்சேதம் ஏற்பட்டது. அப்பொழுது வந்த காவல்துறையினர் மாணவர்களை நோக்கி துவக்கினால் சுடுவதற்கு தயாரானார்கள், வானத்தை நோக்கி இருமுறை துவக்கினால் சுட்டார்கள். மாணவர்கள் மதில் சுவரை தாண்டி ஏறிக்குதித்து துவக்குகுண்டுகளிலிருந்து தப்பித்தார்கள். துவக்குக்கு அஞ்சாமல் உள் நின்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் 18 - பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் இணையத்தையும் கண்காணிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே தமிழ் வலைப்பதிவர்களை மனநோயாளிகள் என்று தமிழக ஊடகங்களும், பிரபல இலக்கியவாதிகளிடமும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. இப்படிப்பட்ட குற்றச்சாட்டால் மனநோய் கூடிப்போய் முற்றியநிலையில் பதிவு போட்டவர்களும் உண்டு. உதாரணத்திற்கு : http://cyrilalex.com/?p=417சட்டக்கல்லூரி மாணவர்களை கைது செய்தீர்கள்! ஏதோ ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்திருக்கிறீர்கள். அரசியல்வாதிகளை கைது செய்திருக்கிறீர்கள். சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள். வலைப்பதிவர்களை கைது செய்தால் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிப்பீர்களா? என்று வலைபதிர்கள் சார்பாக கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. அவனவனும் நாட்டில எதற்கெதற்கோ சங்கங்கள் வைத்திருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவர்களுக்கு என்று ஒரு சங்கம் இருந்திருந்தால் இக்கட்டான சூழ்நிலையில் நமக்கென்று ஆதரவுக்கு வலைபதிவு சங்கத்தினர் வந்திருப்பார்களல்லவா என்று சிந்தனை வருகின்றது. வலை பதிவர்கள் இதுகுறித்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.இதற்கிடையில் இன்று எனக்கு வந்திருந்த மின்னஞ்சலில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் சார்ந்த வீடியோ படங்களை பதிவு செய்வது சட்டப்படி குற்றமென்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.என் பதிவுகளை இதுவரை படித்திருந்த வாசகர்களுக்கோ அல்லது என்னை கண்காணித்துக் கொண்டே இருக்கும் பெங்களுர் குழுவினருக்கோ நான் சொல்லிக் கொள்ளுவதெல்லாம் நான் மிகத் தீவிர புலி எதிர்ப்பாளினியாக மாறிவிட்டேன். ( நாங்க ´பல்டி´ அடிப்பதுல எக்ஸ்பாட்டாக்கும்) நாளையில் இருந்து முற்றிலும் புலியெதிர்ப்புக்கு மாறிவிடுவேன். அதற்கு முன் புலியெதிர்ப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்சமீபத்தில் யூடிப்பில் சில வீடியோ படங்களை பார்த்தேன். அவை குறித்து உங்கள் கருத்துக்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக சில வீடியோ இணைப்புகளை கொடுத்திருக்கின்றேன். அதனால் மிக முக்கியமான மிக மிக முக்கியமான இந்த ஆவணப்படங்களை புலியெதிர்ப்பாளர்கள் மட்டும் பார்க்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். வேறு வாசகர்கள் பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதையும் முதலிலேயே தெரிவித்துக் கொள்கின்றேன். http://www.youtube.com/watch?v=o6JkHtFZY0Yhttp://www.youtube.com/watch?v=s6Nhq6PK0zIhttp://www.youtube.com/watch?v=paTj6lyz70Uhttp://www.youtube.com/watch?v=ARMS1BB13jk
(இன்னும் கிடக்கு உள்ள பாருங்க! நமக்கு டமில் தெரியாது। இவுக இன்னா சொல்றாக....)வாழ்க பேரினவாதம்!வளர்க தீவிரவாதம்! ஒழிக தமிழ் இனம்!ஜெய் ஹிந்த்! ஜெய் ராசபட்சேவ்! (சரிதானுங்களா?)
ரத்தக்காட்டேரி 23/10/2008
நன்றி - தமிழச்சி
Friday, October 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment